|
படையினருக்கும் புலிகளுக்குமிடையே
நேற்று மாலை மல்லாவிக்கு தெற்க்கே இடம்பெற்ற
மோதலின்போது பலியான புலிகளின் 30
சடலங்கள் படையினரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.
படையினருக்கும்
புலிகளுக்குமிடையே நேற்று மாலை
மல்லாவிக்கு தெற்க்கே இடம்பெற்ற
மோதலின்போது புலிகளின் சாள்ஸ் அன்ரனி
படைப்பரிவின் முக்கியஸ்தர் உட்பட
30க்கு மேற்பட்ட புலிகள்
கொல்லப்பட்டுள்ளனர். பல்லவன் என்ற
புலிகளின் முக்கியஸ்தர் உட்பட பலியான
புலிகளின் 30 சடலங்கள் படையினரால்
கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னேறிவரும்
படையினருக்கு எதிரான வலிந்த தாக்குதலை
புலிகள் மேற்கொண்டபோதே இவ் இழப்பு
புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை வன்னியை விடுவிக்கும் இராணுவ
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 57வது
படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ்
தலைமையிலான விசேட படைப்பிரிவு
வவுனிக்குளம் குளக்கட்டு பகுதியை
கைப்பற்றியுள்ளதுடன் தொடர்ந்து
முன்னேறி மல்லாவிக்கு குறுக்காக
செல்லும் பாலியாறு பகுதிவரை
முன்னேறியுள்ளதாக தேசியபாதுகாப்பு ஊடக
மத்திய நிலையம் அறிவித்துள்ளது. |