|
வடக்கே நேற்று
முன்தினம் சனிக்கிழமை பல பகுதிகளிலும்
கடும் மோதல்கள் புலிகளின் உடல்கள்
படைப்பொருட்கள்
கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர்
தெரிவித்துள்ளனர்.
வடக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை
பல பகுதிகளிலும் கடும் மோதல்கள்
நடைபெற்ற அதேநேரம் நேற்று அதிகாலை
கிளாலி பகுதியிலும் மோதல்கள்
நடைபெற்றுள்ளன.
வவுனியாவில்
சனிக்கிழமை காலை 7.30 மணியளவில்
பாலமோட்டை பகுதியிலும் 10.45 மணியளவில்
நெடுங்குளம் மற்றும் நாவற்குளம்
பகுதியிலும் பிற்பகல் 3 மணியளில்
பாலமோட்டை பகுதியிலும் கடும் மோதல்கள்
நடைபெற்றுள்ளன.
இந்த மோதல்களில் எட்டுப் புலிகள்
கொல்லப்பட்டும் பத்துக்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்
படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேநேரம், அன்று நண்பகல் 11.45
மணியளவில் துணுக்காய்க்கு மேற்கே
மோதல்கள் நடைபெற்றுள்ளன.
மணலாறில் காலை 9.25 மணி முதல் மாலை 6
மணிவரை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
நண்பகல் 11.50 மணியளில் ஆண்டான்குளம்
பகுதியில் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
ஜனகபுரவுக்கு வடக்கேயும் மோதல்கள்
நடைபெற்றதில் பல புலிகள்
கொல்லப்பட்டதாக படைத்தரப்பு
தெரிவித்துள்ளது.
இதேநேரம், யாழ். மாவட்டத்தில் கிளாலி
முன்னரங்க நிலைப்பகுதியில் நேற்று
அதிகாலை 4 மணியளவில் படையினர் நடத்திய
திடீர் தாக்குதலில் 15 புலிகள் வரை
கொல்லப்பட்டதாகவும் புலிகளின் உடல்கள்
கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர்
தெரிவித்துள்ளனர்.
|