இளையராஜா
இசை
பீ
கண்ணன்
ஒளிப்பதிவு
என
தொழில்நுட்ப
ஜாம்பவான்களின்
கைவண்ணத்தில்
உருவாகப்போகும்
உளியின்
ஓசையை
ஜெ
நந்தினி
ஆர்ட்ஸ்
சார்பில்
ஆறுமுகனேரி
எஸ்.
பி.முருகேசன்
தயாரிக்கிறார்.
படத்தின்
தொடக்கவிழா
சென்னை
பிரசாத்
ஸ்டுடியோவில்
இன்று
காலை
நடந்தது.
கிளாப்போர்டை
திறந்துவைத்து
படத்தை
தொடங்கி
வைத்தார்
முதல்வர்.
விவேக்
வடிவேலு
பாக்யராஜ்
இராம.
நாராயணன்
ஏ.வி.எம்.
சரவணன்
இளையராஜா
ஆகியோர்
உரையாற்றி
பல்வேறு
கருத்துக்களை
தெரிவித்தனர்.
பெரும்பாலும்
விழாக்களில்
கலந்துகொள்வதை
தவிர்ப்பவர்
இளையராஜா
அப்படி
கலந்துகொண்டாலும்
அசந்தும்கூட
பேசமாட்டார்.
தனது
இந்த
இரண்டு
பழக்கத்துக்கும்
இந்த
விழாவில்
விதிவிலக்கு
அளித்தார்
இளையராஜா.
பேசவும்
செய்தார்;
கருணாநிதி
எழுதிய
ஒரு
திரைப்பட
பாடலை
பாடியும்
காட்டினார்.
"பல
ஆண்டுகளுக்கு
முன்பேசாரப்பள்ளம்
சாமுண்டி'
கதையை
படித்துவிட்டு
அதில்
லயித்தவன்
நான்.
இந்த
கதையை
திரைப்படமாக
எடுக்கலாமே
என்று
அப்போதே
கலைஞரிடம்
சொன்னேன்.
எனது
அந்த
ஆசை
இப்போதுதான்
நிறைவேறியுள்ளது.
படத்தின்
அழைப்பிதழில்
கலைஞர்
தனது
கையில்
உளியை
பிடித்து
செதுக்குவதுபோல்
உள்ளது.
தானே
கல்லாகவும்
தானே
உளியாகவும்
இருந்து
தன்னைத்தானே
செதுக்கிக்
கொள்ளும்
சிற்பிதான்
கலைஞர்.
அவரிடம்
நான்
ஒரு
கோரிக்கை
வைக்கலாம்
என்று
நினைக்கிறேன்"
என்ற
இளையராஜா
"உலக
அரங்கமே
வியந்து
பார்க்கக்கூடிய,
அனைவரும்
பயன்பெறக்கூடிய
வகையில்
இசை
பல்கலைக்கழகம்
ஒன்றை
அமைக்கவேண்டும்"
என்றார்.
அவரைத்தொடர்ந்து
சிறப்புரையாற்றிய
முதல்வர்
நம்முடைய
வரலாற்றுச்
சின்னங்கள்
அழிந்துபோவதற்கு
காரணம்
சரியான
பதிவுகள்
இல்லாததுதான்.
பல
ஆண்டுகளுக்கு
முன்பு
தஞ்சை
பெரிய
கோவிலுக்கு
பார்வையிட
சென்றேன்.
அப்போது
அங்கு
இருக்கவேண்டிய
128
கர்ணங்களுக்கு
பதிலாக
81
கர்ணங்களே
இருந்தது.
இது
எதனால்
என்று
நான்
யோசித்த
விஷயமே
சாரப்பள்ளம்
சாமுண்டி
கதையாக
உருவாகியது
சிற்பக்கலையை
பின்னணியாகக்கொண்ட
படமாக
இது
இருக்கும்.
இசை
பல்கலைக்கழகம்
அமைக்கவேண்டும்
என்று
இளையராஜா
இங்கு
ஒரு
கோரி்க்கை
வைத்தார்
அதற்கு
நான் 'இசை'வு
செய்வேன்
என்று
உறுதியளிக்கிறேன்"
என்றார்.