|
கிழக்கு மாகாண
முதலமைச்சர் பிள்ளையானின் (சிவநேசத்துரை
சந்திரகாந்தன்)அவர்களின்
ஊடகவியலாளர் ஒருவர் துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி
படுகாயமடைந்துள்ளார்.
கிழக்க மாகாண முதலமைச்சர் திரு
சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின்
முன்னாள் ஊடகப் பொறுப்பாளரான ராதிகா
தேவகுமார் என்பவர் பிரபாகரன்
தலைமையிலான மனநோயாளிகளால் இன்று
துப்பாக்கிச் சூட்டிற்கு
இலக்காகியுள்ளார். துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த அவர்
மட்டக்களப்பு மருத்துவமனையில்
சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் ஊடகவியலாளர்
மீது மனநோயாளிகளால் துப்பாக்கிச் சூடு
நடத்தப்பட்டுள்ளது. இதில்
ஊடகவியலாளரான 35 வயதுடைய ராதிகா
தேவகுமார் இன்றிரவு 7.40 மணியளவில்
கல்லடியில் அமைந்துள்ள அவரது
வீட்டுக்கு அருகில் வைத்து இவர் மீது
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வயிற்றில் படுகாயமடைந்த நிலையில் அவர்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் சிறிது காலம் கிழக்கு மாகாண
முதலமைச்சரான சந்திரகாந்தன் அவர்களின்
ஊடக செயலாளராக பணியாற்றியிருந்தமை
இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக
இணைந்து பணியாற்றுபவர்களை
ஒழித்துக்கட்டுவதன்மூலம் தமது தமிழீழக்
கனவை நனவாக்கமுடியுமென கனவு காணும்
புலிப்பயங்கரவாதிகளின் வரலாறு
புதைக்கப்படும் காலம் வெகுவிரைவில்
என்பதனை கிழக்குமக்கள் விரைவில் தமது
செயற்பாட்டின்மூலம் நிரூபிப்பது
நிட்சயமாகும். |
|
|
|