<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

வவுனியா தாலிக்குளத்தில் கொல்லப்பட்ட 6விடுதலைப் புலிகளின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. மாங்குளத்திற்கருகில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீது விமானத் தாக்குதல் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. பூனகரி கெளதாரிமுனையில் வான் தாக்குதல் கடற்புலிகளின் 'கடல்' முகாம் நிர்மூலம் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:07 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

வவுனியா தாலிக்குளத்தில் கொல்லப்பட்ட 6விடுதலைப் புலிகளின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

தாலிக்குளத்தில் கொல்லப்பட்ட 6 விடுதலைப் புலிகளின் சடலங்களும் வவுனியா வைத்தியசாலையில்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மாவட்ட நீதிபதி ஏ.ஜுட்ஸன் மருத்துவ பரிசோதனைகளை நடத்துமாறு வவுனியா சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகைள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மாங்குளத்திற்கருகில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீது விமானத் தாக்குதல் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாங்குளத்திற்கருகில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீது விமானத் தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தி்ற்கு மேற்கே 3கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றின்மீது இன்று காலை 10.20 மணியளவில் விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட இந்த இலக்கின் மீது வெற்றிகரமாக வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை விமானப்படையினர் நடத்திய இரண்டாது வான் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பூனகரி கெளதாரிமுனையில் வான் தாக்குதல் கடற்புலிகளின் 'கடல்' முகாம் நிர்மூலம் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பூனகரி கெளதாரிமுனையில் வான் தாக்குதல் கடற்புலிகளின் 'கடல்' முகாம் நிர்மூலம் என்கிறது விமானப்படை கிளிநொச்சி மாவட்டம் பூனகரி பிரதேசத்தில் உள்ள கெளதாரிமுனை பகுதியில் கடற்புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை 4.15மணியளவில் விமானப்படையினர் நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்த முகாம் அழிக்கப்பட்டுள்ளதாக விமான்பபடை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

'கடல்' என்று பெயரிடப்பட்டுள்ள கடற்புலிகளின் இந்தத் தளத்தின்மீது - விமானப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலின் பின்னர் இன்று காலை அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது அவதானிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright