<%@ Language=JavaScript %> Welcome. !

கத்தோலிக்க மக்களின் யாத்திரைத்தலமாக விளங்கும் மடுமாதா தேவாலயத்துக்கு தெற்கிலிருந்து யாத்திரிகர் சென்றனர். வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டிருந்த 5 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக வன்னிக்கு.அம்பாறையில் 530 வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தேசநிர்மாண அமைச்சு 550 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.  கிழக்கு மாகாண சபையில் ஹக்கீமின் வெற்றிடத்துக்கு அபுஉபைதா ராஸிக்பரீத் நியமிக்கப்பட்டுள்ளார்.தனியார் புதிய பஸ் வண்டிகளை தனியார் இறக்குமதி செய்ய அரசு அனுமதி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

 

 

You are visitor No:Welcome. to Visit.angaltheaasam.com ..!

 
 

  Wanni Operation.12. August 2008 view video 

Wanni Operation 25th and 27th July 2008view video 

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live

  T.B.C.Rodio.Live      

  B.B.C.Tamil       

Download Baamni    

Tamil Font  

 Sithiram Font 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: நிச்சாமம் :: வார்ப்பு  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் வார பலன்

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:13 ஆகஸ்ட் , 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

கத்தோலிக்க மக்களின் யாத்திரைத்தலமாக விளங்கும் மடுமாதா தேவாலயத்துக்கு தெற்கிலிருந்து யாத்திரிகர் சென்றனர்.

கத்தோலிக்க மக்களின் யாத்திரைத்தலமாக விளங்கும் மருத மடுமாதா ஆலயத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை தென்பகுதியில் இருந்து ஒரு தொகுதி யாத்திரிகர்கள் மதவாச்சி சோதனைச்சாவடியூடாக சென்றனர்.

பொலிஸ் பாதுகாப்புடன் இவர்கள் மடுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தார். தினமும் பகலில் மட்டும் 200 பக்தர்கள் மடுவுக்கு சென்றுவர பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதையடுத்து தெற்கில் இருந்து பெருமளவு பக்தர்கள் மடுவுக்கு வர விரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மடுத்தேவாலயத்துக்கு செல்லும் பக்தர்கள் வழிபாடுகளை முடித்துக்கொண்டு அன்றே திரும்பி விடவேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் மன்னார் மாதவாச்சி வீதியூடாகச்சென்று மடுறோட் சந்தி மடு வீதியால் மடுவுக்கு செல்லவேண்டும். இதற்காக மடு றோட் மடு வீதியும் திறக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி சோதனை நிலையத்தில் மடுவுக்கு செல்லும் பக்தர்கள் காலை 6.00 மணிக்கு சமுகமளிக்கவேண்டும் எனவும், காலை 8 மணிக்கு சோதனை முடிவடைந்து மடுவுக்கு செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடுவில் நடைபெறும் வழிபாடுகளின் பின்னர் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார அறிவித்துள்ளார்.

மடுதேவாலய பகுதியில் ஒரு பகுதியில் மட்டும் கண்ணிவெடிகள் மிதி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவு பக்தர்களே அங்கு சென்றுவர தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டிருந்த 5 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக வன்னிக்கு அனுப்பப்பட்டன.

வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் ஐந்து உடல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) ஊடாக வன்னிக்கு அனுப்பப்பட்டன.

வவுனியா கள முனையிலிருந்து கொண்டுவரப்பட்ட மூன்று உடல்களும் மன்னார் களமுனையிலிருந்து வந்த மூன்று உடல்களும் வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று நண்பகல் ஐ.சி.ஆர்.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேநேரம், மணலாறு பகுதியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்ததாகக் கூறி விடுதலைப்புலிகளின் ஆறு உடல்கள் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையில் 530 வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தேசநிர்மாண அமைச்சு 550 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

ஜாதிகசவிய மற்றும் கமநெகும வேலைத்திட்டங்கள் உட்பட சுமார் 530 வேலைத்திட்டங்களுக்கு தேச நிர்மாண அமைச்சின் மூலம் 550 மில்லியன் ரூபா அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அம்பாறை கச்சேரி கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற கமநெகும வேலைத்திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டைப்போல் 4 மடங்கு அதிக நிதி இம்முறை இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதே அமைச்சின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கிட்டீன் மூலம் மேலும் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 650 மில்லியன் ரூபா இவ்வமைச்சின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதியாவும் அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதனால் அரசாங்க அதிபரின் உப அலுவலகங்களான பிரதேச செயலகங்களின் மூலமாகவே இவை செயல்ப்படுத்தப்படும். இதில் 95 வீதமானவை வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே இத்திட்டங்களை அமுல்படுத்தும் போது உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவைப்படுகின்றது.இவற்றை தவிசாளர்கள் வழங்க வேண்டும் இல்லையானால் இத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது.

அனுமதிக்கப்பட்ட 530 வேலைத்திட்டங்களில் 259 திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனையவற்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். மதிப்பீடுகளை உடன் தயாரித்து இவைகளை அவசரப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு மில்லியன் ரூபாவுக்கு குறைந்த மதிப்பீடுகளுக்கு பிரதேச செயலாளரே அனுமதி வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் ஹக்கீமின் வெற்றிடத்துக்கு அபுஉபைதா ராஸிக்பரீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ராஜிநாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு , புதிய உறுப்பினர் அபு உபைதா ராஸிக் பரீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூதூரைச் சேர்ந்த இவர் மே 10 திகதி நடைபெற்ற கிழக்குமாகாண சபைக்கான தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டார். இப்போட்டியில் தலைமை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் போட்டியிட்டு பட்டியலில் ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்றுத் தெரிவானார். இவரின் ராஜிநாமாவல் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அப்பட்டியலில் அடுத்து கூடுதலான வாக்குகளை பெற்றவர் என்ற அடிப்படையில் மூதூரிலிருந்து போட்டியிட்ட ரஸிக் பரீத் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது பெயர் வர்த்தமானியில் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸனலியின் ராஜினமாவால் கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இன்னும் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்று மாகாண சபை பேரவையின் செயலாளர் இ.தியாகலிங்கம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் வெற்றி பெற்றார்.இதேவேளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் கிழக்கு மாகாண சபைக்கு போனஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு முன்னாள் அரச அதிபர் எஸ்.மோனகுருசாமி பதவி ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கிழக்கு மாகாண சபையில் இன்னும் ஆசனங்கள் நிரப்பப்படமால் உள்ளது. கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 35. நிர்வாகத்தை கைப்பற்றிய கட்சிக்கு வழங்கப்பட்ட இரண்டு போனஸ் ஆசனங்களையும் சேர்த்து மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 ஆகும்.

தனியார் புதிய பஸ் வண்டிகளை தனியார் இறக்குமதி செய்ய அரசு அனுமதி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் மேலும் பஸ் வண்டிகளை இறக்குமதிசெய்யும் வகையில் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப் பெருமவினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இப்புதிய ஒழுங்கு விதிகளின் கீழ், ஐந்துவருடகாலம் தமது பஸ்வண்டிகளை சேவையில் ஈடுப்படுத்தியுள்ள பஸ் உரிமையாளர்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட வரி விலையில் புதிய பஸ்வண்டியை கொள்வனவு செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சு வட்டாரங்கள் தகவல் தருகையில், பயங்கரவாத நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்ட பஸ்வண்டி உரிமையாளர்களும் இத்திட்டத்தின் மூலம் நன்மை பெறமுடியும் என தெரிவித்தன.

இதுகுறித்து அமைச்சர் அழகப்பெரும ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், இப்புதிய திட்டத்தின் கீழ்,இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு பஸ் வண்டி இறக்குமதியின் போதும் சுமார் 6 இலட்சம் ரூபாவை ஆதாயமாக பெற்றுக்கொள்ள முடியும்.

பயணிகள் போக்குவரத்துச் சேவையை முறையாக முன்னெடுக்கவென பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை கூடுதலான பொறுப்பையும் பாதுகாப்பையும் வழங்க முன்வந்துள்ளது. நீண்ட தூர சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டே அமைச்சரவையில் இப் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டம் பொதுமக்களின் நலனை கவனத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன் கூடுதலாக தனியார் பஸ் உரிமையாளர்கள் இதன்மூலம் நன்மை பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

<<முன்னைய பதிவுகள்>>

தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage

INFO
LANKA

Worldnews

        Last update: 20-06-2008. Desigin and Copyright