|
வடபகுதி
அபிவிருத்திக்காக கனரக இயந்திரத்
தொகுதிகள் கையளிப்பு ஈபிடிபியின்
செயலாளர் வடமாகாண விசேட செயலணியின்
தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, பிரதி
அமைச்சர்கள்.
வடபகுதிக்கு அபிவிருத்திப் பணிகளை
துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்கு
உதவும் வகையில் அரசாங்கத்தால் கனரக
இயந்திரத் தொகுதிகள் இன்று முற்பகல்
வைபரீதியாக கையளிக்கப்பட்டது.இன்று
முற்பகல் இந்த வைபவம் கொழும்பு
காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந்த
வைபவத்தில் ஜனாதிபதியின் சிரேஸ்ட
ஆலோசகர் பசில் ராஜபக்ச, ஈபிடிபியின்
செயலாளர் நாயகமும், சமூக சேவைகள்
மற்றும் சமூகநலத்துறை அமைச்சரும்,
வடமாகாண விசேட செயலணியின் தலைவருமான
டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர்கள்
வடிவேல் சுரேஸ், அமீர் அலி, மேல்
மாகாண ஆளுனர் அலவி மௌலான மற்றும்
பலரும் கலந்து கொண்டனர்.
வடபகுதியில் மேற்கொள்ள வேண்டியப பல
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கனரக
இயந்திரத் தொகுதிகள் பற்றாக்குறை நிலவி
வந்தது அரசாங்கத்தின் கவனத்துக்கு
கொண்டுவரப்பட்டதை அடுத்து அரசாங்கம்
இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த இயந்திரத் தொகுதிகள் வீதிகள்
புனரமைப்பு குளங்கள் புனரமைப்பு
மற்றும் கட்டிட நிர்மாணிப்புக்களில்
பாரிய பங்கினை வகிக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த வைபவத்தில்
கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் கருத்துத்
தெரிவிக்கையில், இந்த இயந்திரத்
தொகுதிகளை வடபகுதி மக்களின்
அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இவற்றை
வழங்க நடவடிக்கை மேற்கொண்ட
ஜனாதிபதிக்கு தனது நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்வதாகவும்
குறிப்பிட்டார்.



 |
|
|
|