|
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்
தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா
அம்மான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
பாராளுமன்று உறுப்பினராக சற்று நேரத்துக்கு
முன்னர் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.
லொகுபண்டார முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
செய்துகொண்டார்.
பாராளுமன்றம் நுழைந்த தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சியின் முதல் உறுப்பினர்
இவர் ஆவார். புலிகளின் தலைவர் பிரபாகரனுடன்
ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக
இவர் 2003 ஆம் ஆண்டு; எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிலிருந்து
விலகியதன் பின்னரே இக்கட்சியை உருவாக்கினார்.
விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்று
உறுப்பினர்கள் ஐ.தே.க. உறுப்பினர்கள்
மற்றும் தமிழ் தேசிய கூட்டணி
உறுப்பினர்கள்
ஈபிடிபியின் செயலாளர் அமைச்சரும்,
தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, ஆகியோர்
பாராளுமன்றத்தில் பெரும் வரவேற்பளித்தனர்.
சத்தியப்பிரமாணம் நடைபெற்ற சமயம் மக்கள்
விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சபையில்
இருக்கவில்லை.







 |
|
|
|