|
வெலிக்கந்தையிலுள்ள
ரி.எம்.வி.பி காரியாலயத்தில் விஷேட
கருத்தரங்கு ஒன்று நேற்று தலைவர்
கருணா அம்மான் பங்கு கொண்டு
இருந்தார்.
வெலிக்கந்தையிலுள்ள ரி.எம்.வி.பி
காரியாலயத்தில் விஷேட கருத்தரங்கு
ஒன்று நேற்று (02.10.2008) காலை 10
மணியளவில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் பங்கு கொண்ட அதன்
தலைவர் கருணா அம்மான் ரி.எம்.வி.பி.
உறுப்பினர்கள் எவ்வாறான அரசியல்
பார்வை கொண்டவர்களாக வளர வேண்டும்?
அவர்கள் மீது தமிழ் சமூகம்
சுமத்தியிருக்கின்ற அரசியல் சுமைகள்
என்ன? அவற்றை எவ்வாறு ரி.எம்.வி.பி.
கையாள வேண்டும்? அடிமட்ட
உறுப்பினர்களில் இருந்து மேல் மட்ட
தலைமைகள் வரை மக்களை அணுக வேண்டிய வழி
முறைகள் என்ன? அவர்கள் எவ்வாறு எமது
சமூகத்தில் உள்ள சகல தரப்பினரையும்
மதிப்பளித்து பழக வேண்டும்?
சமூகத்தில் எவ்வகையான ஓழுக்கக்
கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்? போன்ற
அதி முக்கிய சமூக, அரசியல் விடயங்கள்
குறித்து விளக்கி இருந்தார்.
அமைப்பின் சகல மட்டத்தினருடைய
கருத்துக்களும் அனைத்து போராளிகளையும்
சென்றடையும் முகமாக ஏற்பாடாகி இருந்த
அந்த கருத்து பரிமாற்ற நிகழ்வில் பல
போராளிகளும் பொறுப்பாளர்களும்
உரையாற்றினர் இக் கருத்தரங்கில்
ரி.எம்.வி.பி.யின் மேல்நிலைத்
தலைவர்களான ஜெயம், மார்க்கன்,
சின்னத்தம்பி, இனியபாரதி,
ஜீவேந்திரன், ரஞ்சன், இளங்கீதன்,
வீரா, பிரதீப் மாஸ்ரர் ஆகியோர்
உட்பட்ட பிரதேச பொறுப்பாளர்கள்
போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 |
|
|
|