|
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தையும்
சமாதானத்தையும் வளர்ப்பதற்கு
செயன்முறை கொள்கைகள் தொடர்பானகிழக்கு
மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன்
அவர்கள் கலந்துரையாடல்.
மார்க்கா நிறுவனத்தின் உயர்
பிரதிநிதிகள் அடங்கிய குழுவும்
மட்டக்களப்பு மாவட்டத்தின்
புத்திஜீவிகள் பலரும் இணைந்து கிழக்கு
மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன்
அவர்களை தனது மட்டக்களப்பு
வாசஸ்தலத்தில் (28.09.2008) சந்தித்து
கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.
மேற்படி சந்திப்பில் முக்கியமாக
கிழக்கின் அபிவிருத்தி மற்றும்
பாதுகாப்பு ஜனநாயகம் சமாதானம் போன்ற
எண்ணக்கருக்கள் ஆழமாக ஆராயப்பட்டன.
கிழக்கு மாகாணம் தற்போது புலிகளின்
பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு
ஜனநாயகச் சூழல் உருவெடுத்துக் கொண்டு
வருகின்ற பட்சத்தில் கிழக்கு
மாகாணத்திற்கான அபிவிருத்தியின்
நிலைப்பாடு என்ன என ஆராய்ந்து அவ்
அபிவிருத்தியினை மேற்கொள்கின்ற
பட்டத்தில் எதிர் நோக்கும்
பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது இதற்கு
மார்க்கா நிறுவனம் எவ்வாறான உதவிகளை
புரிய வேண்டும் எனவும், மார்க்கா
நிறுவனம் சார்பாக பேசிய உயர் அதிகாரி
ஒருவர்; தெரிவித்தார்.
இதில் கருத்து வெளியிட்ட முதலமைச்சர்
சந்திரகாந்தன் இக் கலந்துரையாடலானது
உண்மையில் கிழக்கு மாகாணத்தில்
ஜனநாயகத்தையும், சமாதானத்தையும்
வளர்ப்பதற்கு செயன்முறை கொள்கைகள்
தொடர்பான ஓர் கலந்தரையாடலாகவே நான்
பார்க்கின்றேன். கிழக்கு மாகாணம்
தற்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின்
வழிகாட்டலின் கீழ் பல அபிவிருத்தி
திட்டங்கள் முன்னெடுத்துச்
செல்லப்படுகின்றது. இவ் அபிவிருத்தி
திட்டங்களை கிழக்கு மாகாண சபை திறம்பட
அமுல்படுத்தி அவ் அபிவிருத்தி
திட்டங்களை வேகமாக செயற்படுத்தி
செல்கின்றது.
குறிப்பாக இவ்வாறான அபிவிருத்தி
திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்ற
பட்ச்சத்தில் சில இடர்பாடுகளை
சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. அது
உண்மையிலேயே ஜனநாயகத்தை
சீர்குலைக்கின்ற செயற்பாடாக சிலர் அதனை
பெரிதுபடுத்துகின்றனர். கிழக்கு
மாகாணத்தை பொருத்தவரை ஜனநாயகம்,
சமாதானம், அபிவிருத்தி என்பன தற்போது
துளிர்விட்டுக்கொண்டு வருகின்றது. இதனை
தொடர்ந்து கொண்டு செல்வதற்கு உங்களைப்
போன்ற சமாதானம் விரும்புகின்ற நிறுவன
அமைப்புக்கள் துணை நிற்க வேண்டும் எனக்
கேட்டுகொண்டார்.
 |
|
|
|