<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

இன்று புத்தலத்தில் பயணிகள் பஸ்வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மூவர் பலி 26 பேர் காயம்.  :: கொழும்பில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்?-இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. படையினர் உஷாராக இருக்க வேண்டும! :: அவசரகாலச் சட்டம் 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! :: முல்லைத்தீவூ காட்டுக்குள் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு! :: இந்தியா ஆளில்லா உளவு விமானங்களை தமிழ் நாட்டின் கரையோரத்தில் பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Wanni Operation  09th July 2008 view video

Wanni Operation 04th, 05th and 06th July 2008 view video

Progress of Wanni theatre of operations View Vedio

  T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

இணையங்கள்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 ஜுலை, 2008

வெப்பநிலை அதிகரிப்பை தடுப்பதற்கான இலக்குகள் எதுவுமின்றி ஜி8 நாடுகளின் மாநாடு நிறைவு

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய பொறுப்புகளை பகிர்ந்தளிக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கான இணக்கப்பாட்டுடன் ஜப்பானின் ஹொக்கெய்டோ தீவில் நடைபெற்ற ஜி8 நாடுகளின் மாநாடு முடிவடைந்துள்ளது.
ஆனால் 2050 ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 50 வீதத்தால் குறைப்பதற்கான ஜி8 நாடுகளின் தலைவர்களின் கோரிக்கையை இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகள் நிராகரித்துள்ளன.

உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பாரிய சவால்களில் காலநிலை மாற்றமும் ஒன்றென உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அதனைத் தடுப்பதற்கான இலக்குகள் எதுவும் இங்கு நிர்ணயிக்கப்படவில்லை.


3 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் சிம்பாப்வே நெருக்கடி உலகளாவிய ரீதியில் உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

உலகம் வெப்பமயமாதலுக்கெதிராக வெவ்வேறுபட்ட பொறுப்புகளின் அடிப்படையில் இணைந்து பணியாற்றுவதற்கு அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே மற்றும் அவரது உதவியாளர்கள் மீது போக்குவரத்து தடைகளை விதிப்பதுடன் அவர்களின் சொத்துகளையும் முடக்க வேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இம்மாநாட்டில் வலியுறுத்தியிருந்தன.

புத்தலத்தில் பயணிகள் பஸ்வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மூவர் பலி 26 பேர் காயம்.

புத்தல கதிர்காமம் வீதியில் பயணித்த பயணிகள் பஸ்வண்டியொன்றின் மீது இன்று காலை 10.30 மணியளவில் (11)மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் பலியானதுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மொனராகல பஸ் டிபோவிற்கு சொந்தகான இப் பயணிகள் பஸ் வண்டி புத்தலத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி வந்துக் கொண்டிருந்த வேளை 147 ஆவது மைல் கல் அருகே வைத்து மீ துப்பாக்கி பிரயோகத்திற்குட்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பலியானவர்களில் இருவர் ஆண்கள் மற்றையவர் பெண். காயமடைந்த 19 பேர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் 7 பேர் கதிர்காமம் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற மோதல்களில் படையினர் முன்னேறி வருகின்றனர்

பாதுகாப்பு படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப்ுலிகள் தரப்பில் 19பேர் பலியாகியுள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு படைத்தரப்பில் இருவர் பலியாகியதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி இம் மோதல்கள் வடக்கு வவுனியா மன்னார் மற்றும் வெலிஓய ஆகிய பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளது.

தகவல் : தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம்

பாலமோட்டையில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு விடுதலைப் புலிகள் அறிவிப்பு

வவுனியா பாலமோட்டையில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன் 70 பேர் படுகாயமடைந்துள்ளதாக புலிகளின் இராணுவத் துறை பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில், வவுனியாவில் உள்ள பாலமோட்டையில் நேற்று முன்தினம் 12.40 மணியளவில் ஷெல் தாக்குதலை நடத்தியவாறு படையினர் முன்னேற முயற்சித்தனர். படையினரின் முன்னகர்வுக்கு எதிராக புலிகள் முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார்.

ஆனால் புலிகளின் அறிவிப்பினை படைத்தரப்பினர் மறுத்துள்ளனர்.

வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை காலை முதல் அனைத்து கையடக்கத் தொலைபேசிகளும் முற்றாகச் செயலிழந்தன.

வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை காலை முதல் அனைத்து கையடக்கத் தொலைபேசிகளும் முற்றாகச் செயலிழந்தன. ஏற்கனவே, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சி.டி.எம்.ஏ. தொலைபேசிகள் முற்றாகச் செயலிழந்த நிலையில் நேற்றுக் காலை முதல் வவுனியாவில் கையடக்கத் தொலைபேசிகளும் முற்றாகச் செயலிழந்தன.

உள்வரும் மற்றும் வெளிச் செல்லும் அழைப்புகளை பெற முடியாது ஆயிரக்கணக்கான கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர்.


பாதுகாப்புக் காரணங்களுக்காகவே தற்போது கையடக்கத் தொலைபேசிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, வடக்கின் சகல பகுதிகளிலும் சி.டி.எம்.ஏ. தொலைபேசிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக படைத்தரப்பால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் யாழ். குடாவிலும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டும் எம்.பி.யாக ஹக்கீம் சபையில் சத்தியப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொக்குபண்டார முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 6ஆம் பக்கம் பார்க்க... பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் கூடிய போதே ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ரவூப் ஹக்கீம், ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோர் தமது எம்.பி. பதவிகளை இராஜிநாமா செய்திருந்தனர்.

இந்நிலையில், ரவூப் ஹக்கீமின் இடத்துக்காக முஹம்மட் நௌஷாட் எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். தற்போது பஷீர் சேகுதாவூத்தின் இடத்துக்கு ரவூப் ஹக்கீம் மீண்டும் எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலை நிறுத்தப்போராட்டத்தை தோல்வியடையச் செய்த தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

  வேலைநிறுத்த போராட்டத்தை தோல்வியடையச் செய்த தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த வர்த்தகர்களை அலரிமாளிகையில் நேற்று சந்தித்த  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜே.வி.பி., ஐ.தே.க., தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டத்திற்கு புலிகளும் ஆதரவளிப்பதாக பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றுக்கு மத்தியில் வேலைநிறுத்தத்தின்  சூழ்ச்சியை மக்கள் புரிந்துகொண்டனர்.

தாய் நாடு  முன்னேற்ற காலகட்டத்தினை நோக்கிய  நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தை தொழிலாளர்கள் தோல்வியடைய செய்துள்ளனர். அந்த தொழிலாளர்களுக்கு தேசிய ஆசீர்வாதம் கிடைக்கும்.
பயங்கரவாதிகளிடமிருந்து  நாட்டை மீட்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

<<முன்னைய பதிவுகள்>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright