தமக்குத் தீமையைச்
செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை
செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள்
எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.
2008ம் ஆண்டின் முதல் எட்டு
மாத காலப்பகுதியில் தாம் 1509
பேரை மட்டுமே பலி
கொடுத்துள்ளோம் என புலிகள்
இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த வருட
ஆரம்பத்தில் இருந்து ஆவணி
வரையான எட்டு மாதங்களில் 1509
புலிகள் பலியாகியதாவும் அதில்
1047 ஆண் புலிகளும் 462 பெண்
புலிகளுமாக 1509 பேர்
பலியாகியுள்ளனர் எனவும் அரசு
வெளியிடும் தகவல்களில்
உண்மையில்லை எனவும் புலிகள்
தெரிவித்துள்ளனர். அதாவது
மாதாந்தம் சராசரி 188 பேர்
என்ற அடிப்படையில் இவ்வாறு
பலி கொடுக்கப்பட்டதை புலிகள்
பெருமிதமாகத்
தெரிவித்துள்ளனர். பலவந்தமாக
வீட்டுக்கொருவர் எனவும் அரச
ஊழியர்கள் எனவும் மற்றும்
சிறுவர், சிறுமியர் என
பாகுபாடின்றி பிடிக்கப்பட்டு
பயிற்சியளிக்கப்பட்ட பின்னர்
முன்னரங்கு போர் முனைக்கு
அனுப்பப்பட்டவர்களுக்கே
புலிகள் இவ்வாறு இன்று
புள்ளிவிபரம்
வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, 1982ம் ஆண்டு
நவம்பர் 27ம் திகதி தொடக்கம்
2008ம் ஆண்டு ஓகஸ்ட் 31ம்
திகதி வரை 21648 பேர்
பலியாகியுள்ளனர். அவர்களில்
16953 ஆண்களும் 4695
பெண்களும் அடங்குவர் எனவும்
அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் புலிகள்தான் தமிழ்
மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற
கோதாவில் சகோதர அமைப்புக்களை
புலிகள் இயக்கம் தடைசெய்த
சமயம் ஏற்பட்ட மோதல்களின்
போது கொல்லப்பட்ட புலி
உறுப்பினர்களின் தொகையும்
இவ்வறிக்கைக்குள் அடங்குகிறதா?
என்பதை புலிகள் இயக்கம்
தெரிவிக்கவில்லை. அத்துடன்
கிழக்கில் 2005ல் புலிகள்
தங்களுக்குள்ளேயே பிளவுபட்டு
மோதிக்கொண்ட சமயத்தில்
கொல்லப்பட்ட உறுப்பினர்களின்
எண்ணிக்கையும் இதில்
அடக்கப்பட்டுள்ளதா என்பதையும்
விரிவாகத் தெரிவிக்கவில்லை
என்பது இங்கு
குறிப்பிடத்தக்கதாகும்
Wanni
Operation - Sri Lanka Military
Situation on Photos&Video