|
|
|
|
|
 |
|
தேசிய
அருங்கலைகள் பேரவை அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு. |
|
|
தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர்
உள்ளிட்ட குழுவினர் பாரம்பரிய
கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில்
முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்களை அமைச்சின்
செயலகத்தில் இன்று சந்தித்து
கலந்துரையாடியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய
அருங்கலைகள் பேரவை எதிர்காலத்தில்
முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள்
குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது தமது அமைச்சின் ஊடாக பல்வேறு
உதவித் திட்டங்களை வழங்கி அதன் மூலம்
பேரவையின் வளர்ச்சிக்கு உதவ தாம்
தயாராக இருப்பதாகவும் எதிர்காலத்தில்
நல்ல முறையில் பேரவை வளர்ச்சியடைந்து
மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே தனது
விருப்பம் என்றும் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்களுடன் அமைச்சின்
செயலாளர் ஆலோசகர் தேசிய அருங்கலைகள்
பேரவைத் தலைவர் புத்தி கீர்த்திசேன
உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகளும்
கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்
வைத்தனர்.

 |
|
|
|
|
|