செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:ஜனவரி 26,2012

*தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

விசித்திரமான அரசியல் களம் இது.கூத்தாடி ஜெயதேவனுக்கு ஏனிந்த குரங்குச்சேட்டை?….

Bookmark and Share
விசித்திரமான அரசியல் களம் இது. மேடைக்கொரு வேடம் போட்டு நாளுக்கொரு கூத்தாடும் அசிங்கமான முகங்களே இப்போது அரசியல் மேடைகளையும் எட்டிப்பார்க்க முனைகின்றன. அதில் பிரித்தானிய சுரண்டல் கொம்பனிகளின் பங்குதாராரான கொழுத்த முதலாளி ஜெயதேவன் என்பவர் முக்கிய பாத்திரம்.

புலிகளுக்கு கோயில் கணக்கு காட்டுவதில் டிமிக்கு விட்டு கோயில்பணத்தை சுருட்டிக்கொண்ட ஜெயதேவன் வன்னியில் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கதை பழைய கதை.

தப்பினேன் பிழைத்தேன் என்று புலிகளின் சிறை மீண்டு வந்த ஜெயதேவன் தன்னை ஒரு தியாகியாக புலம்பெயர் புத்திஜுவிகள் மத்தியில் காட்டிக்கொண்டவர். ஏதோ புலிகளோடு அரசியல் ரீதியில் முரண்பட்டவர் போல் காட்டிக்கொள்ளும் இவர் கோயிலில் கொள்ளையடித்த பணத்துக்கு பங்குச்சண்டை போட்டது உலகறிந்த கதை.

அத்தோடு அவர் அரசாங்கத்தரப்போடு உறவுகளை வைத்துக்கொண்டார். பிரித்தானியாவில் இருந்து கொழும்புக்கு சென்று ஐனாதிபதி மகிந்தாவின் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து சமபந்த போசனம் எடுக்க முயன்றாராக்கும். ஆனாலும், அது கை கூடவில்லை. கொழும்புக்கு போன ஜெயதேவன் ஐனாபதியை சந்திக்க முடியாத வெப்பியாரத்தில் கோவணத்துடன் திரும்பி வந்தார்.

தான் ஐனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குறை கண்டு குமுறி எழுந்தார் ஜெயதேவன். அடடா என்ன கொள்கைக்குன்று. ஐனாதிபதியை சந்திப்பதற்கு ஒழுங்கு செய்திருந்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நல்வர் வல்லவர். இல்லை என்றால் ஈ.பி.டி.பி யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரச துணை இராணுவமாம்.

ஆதன் பின்னர் பிரித்தானியவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளோடு தொடர்பு கொண்ட ஜெயதேவன் அரசாங்கத்தின் பிரச்சாரதாரராக தான் செயற்படுவதாகவும், அதற்கு மாதாந்த ஊதியதம் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இணங்க மறுத்தது தூதராலயம். ஆனாலும் உறவுகளை தீரட்டத்தனமாக வைத்துக்கொண்டு சம காலத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பது போல் பாசாங்கு செய்தும் வந்தார்.

இடையில் இலங்கை தூதராலய உறவுகளை முறித்துக்கொண்ட ஜெயதேவன் அண்மையில் தாயகம் செல்வதற்காக மீண்டும் தூதராலய அதிகாரிகளோடு பேசினார். சென்றார்… வந்தார்…. இப்போது மீண்டும் தனது கூத்தாடித்தனமான குரங்குச்சேட்டைகளை விடத்தொடங்கி விட்டார்.

இந்த விண்ணாதி விண்ணன் தான் என்னவோ தமிழ் மக்கள் மீது பற்றுதல் கொண்டவர் போல் கூத்தாடி வருகின்றார். கசாப்புக்கடைக்காரன் ஜுவகாருண்யம் பேசுவது போல் ஜெயதேவன் என்ற குட்டிச்சாத்தானும் இப்போது மனித உரிமை குறித்து பேசுகின்றது.

பாவம் ஜெயதேவன். யாராவது கூட்டீக்கொண்டு போய் ஐனாதிபதி மகிந்தாவின் சாப்பாட்டு மேசையில் சமபந்தி போசனத்திற்கு உட்கார வைத்துவிட்டால் சரி. அத்தோடு இவரது கொள்கைக்கோவணம் கொடி கட்டிப்பறந்து விடுமாம்.

இவரது மனித உரிமை குறித்த வாய்ச்சவடால்கள் எல்லாம் ஒழிந்து விடும். யாராவது முன்வாருங்கள்.

யார் தருவார் இந்த அரியாசனம்?…புவி அரசரோடு எனக்கும் ஒரு சரியாசனம்!

கேட்கிறார் கூத்தாடி ஜெயதேவன். யாராவது செய்து கொடுப்பீர்களா?….

இப்படிக்கு பண்டிதர்!

தொடரும்…

Mr Rajasingham Jayadevan has 11 company director or secretary appointments.

Short name – Rajasingham Jayadevan
Director ID : 908508599
Month/Year of Birth: 12/1955

http://company-director-check.co.uk/director/908508599

 

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!