செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:ஜனவரி 26,2012

*தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

கூட்டமைப்பு கிழக்கு முதல்வருடன் பேசினால் அது கிழக்கின் கரிநாள், துக்கதினம்!

Bookmark and Share
இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கு கூட்டமைப்பு பதில் அளித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு மாகாண முதலமைச்சரை கூட்டமைப்பு சந்திக்கும் நாள் கிழக்கின் கரி நாளாக துக்கதினம் அனுஸ்ரிக்குமாறு கிழக்குப் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

இன்னல்கள் இடையுறுகள் மத்தியில் இணைந்த வட- கிழக்கில் அதி உச்ச ஆணையை பல அச்சுறுத்தல் ஆபத்து நிறைந்த சூழலிலும் கூட்டமைப்பிற்கு எமது மக்கள் வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக கிழக்கு மண்ணில் தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்ததற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைமையும் செய்த சூழ்ச்சிகளை யாரும் எளிதில் மறக்க முடியாது.

இவ்வாறான நிலையில் இடம்பெற உள்ள சந்திப்பு நாளை கிழக்கு மாகாணத்தில் துக்க தினமாக அனுஸ்ரிக்குமாறு கிழக்குப் பல்களைக் கழக பழைய மாணவர்கள் அவசர வேண்டுகேள் விடுத்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் வழங்கிய ஆணையை மதித்து நடக்க வேண்டும் மாறாக மிதித்து நடக்கும் செயற்பாடு வாக்களித்த மக்களை இனிவரும் நாட்களில் இழப்பதற்கே வழி வகுக்கும்.

எவ்வளவு இக்கட்டான சூழலில் வட- கிழக்கில் தேர்தலை எமது மக்கள் சந்தித்து கூட்டமைப்பை வெற்றி பெற செய்தனர் என்பது உளகறிந்த உண்மை. அன்றைய தேர்தல் காலத்தில் சிங்களத்துடன் மட்டும் எம் சமூகம் போராட வில்லை அதனுடன் இன்று உங்களுக்கு மடல் எழுதிய சிங்களத்தின் கூலிப்படைகளுடனும் போராடியே வெற்றி வாகை சூடினோம் மறந்து விடாதீர்கள்.

நாம் உங்களிடம் எதிர்பாத்தது எல்லாம் உரிமை வெல்லும் ராஜ தந்திர நகர்வுகளை முன்னெடுப்பதனை அதற்கு இன்று இலங்கை அரசுடனும் சர்வதேச அரசுகளுடன் பேசுசிறீர்கள் நல்லது அதை விடுத்து விதண்டா வாத அரசியல் செய்து சளைத்து எம் இனத்தையே பலவீனப்படுத்தியவர்களிடம் பேசுவதனால் என்ன பலனை நாம் அனுபவிக்கப் பேகிறோம்?

இதயமும் உதிரமும் போன்ற வட- கிழக்கு இணைப்புத் தவிந்த மற்றைய அனைத்து விடயங்களிலும் பேசத் தயார் என தெளிவாக கூறுபவர்களிடம் இன்னமும் எதனைப் பற்றி பேசப் பேகிறீர்கள். ஒரு விடயம் மறைமுகமாக புலனாகிறது கடிதம் எழுதுபவர்களையும் அதற்கு பதில் அனுப்பும் உங்கள் கட்சியையும் இயக்குவது ஒரு சாரார் என எண்ண வாய்ப்புள்ளது.

எமது தீர்வு எம்மை நாடி வந்த நிலையில் எல்லாம் அதனை மழுங்கடிக்க எதிரியும் நாம் நண்பன் என நினைத்தவனும் எமக்கு இழைத்த வரலாற்று சதிகளை எல்லோரும் நன்கறிவர் அதற்கு நீங்களும் விதிவிலக்கல்லர்.

இவ்வாறாக இவ்வளவு எதிர் விணை தெரிந்தும் சந்திப்பு இடம் பெறுமாக இருந்தால் அன்றய நாள் கிழக்கில் கூட்டமைப்பின் அஸ்தமனத்தின் ஆரம்ப நாள் என்பதை கூட்டமைப்பு தலைமைகள் கிழக்கின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மனதில் இருத்துவது இன்றய காலத்தின் கருத்தாகும்.

மக்கள் கூட்டம் மாணவர் சமூகத்தின் முன்னால் கட்சிகள் எல்லாம் இரண்டாம் நிலை என்பதை சகலரும் நன்கறிவர்.

பழைய மாணவர்கள் கிழக்குப் பல்களைக் கழகம்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!