|
புனர்வாழ்வூ
முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும்
30பேரை எதிர்வரும் 27ஆம் திகதி
வெள்ளிக்கிழமை அவர்களது
குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை
எடுத்திருப்பதாக புனர்வாழ்வூ
நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர்
நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க
தெரிவித்தார்.
இம்முறை ஐந்து வயதுக்கு குறைந்த
பிள்ளைகளையூடைய தாய்மார் மற்றும்
சுகயீனமுற்ற 30பேரை விடுவிக்க நட
வடிக்கை எடுத்திருப்பதாகவூம் ஆணையாளர்
கூறினார்.
மோதல்களின் போது புலி உறுப்பினர்களுடன்
தொடர்புடையவர்கள் சரணடையூமாறு
இராணுவத்தினர் கேட்டுக் கொண்டதற்கமைய
சரணடைந்த பல்வேறு வயதிற்குட்பட்டவர்கள்
வெவ் வேறு புனர்வாழ்வூநிலையங்களின்
கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டு
வருகின்றனர்.அவர்களுக்கான விசாரணைகள்
முடிவடைந்த பின்னர் வயதெல்லை
அடிப்படையில் இவர்கள் கட்டம் கட்டமாக
விடுவிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில்இ புனர்வாழ்வூ
நிலையங்களிலிருந்து இதுவரையில்
3080முன்னாள் புலி உறுப்பினர்கள்
தமக்குரிய விசாரணைகள்
முடிவடைந்ததையடுத்து பெற்றௌர் அல்லது
பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்
பட்டுள்ளனர்.இதனடிப்படையில் தெரிவூ
செய்யப்பட்ட ஐந்து வயதுக்கு குறைந்த
பிள்ளைகளையூடைய தாய்மார் மற்றும் கடும்
சுகயீனமுற்ற 30பேரே அடுத்த கட்டமாக
விடுவிக்கப்படவிருப்பதாகவூம் ஆணையாளர்
கூறினார்.
இதேவேளைஇ;புனர்வாழ்வூ நிலையத்தில்
வைத்து சட்டபூர்வமாக திருமணம் செய்து
வைக்கப்பட்ட 59குடும்பத்தாருக்கு
அன்றைய தினம் சுய தொழில் வாய்ப்பைப்
பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தோட்டப்
பயிர்ச் செய்கைக்கான உபகரணங்கள்
மரக்கன்றுகள்களை நாசினிகள் ஆகியனவூம்
வழங்கப்படவூள்ளன.இதற்கான ஏற்பாடுகளை
புனர்வாழ்வூ அமை ச்சுடன் இணைந்து
விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது. |