<%@ Language=JavaScript %> Welcome.To./\.www.engaltheaasam.com Welcome. !

04. 07. 2009. உலக தலைப்பு செய்திகள் ::  ஆங் சாங் சூகியின் விடுதலையை வலியுறுத்துவதற்காக ஐ.நா. பொதுச் செயலர் மியன்மாருக்கு விஜயம். *  அட்லாண்டிக் சமுத்திரத்தில் விபத்துக்குள்ளான எயார் பிரான்ஸ் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறவில்லையென விசாரணை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. * ஜக்சனின் இரு பிள்ளைகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு முதல் மனைவி வழக்குத் தாக்கல். *  ஒபாமாவின் விஜயம் அமெரிக்க ரஷ்ய உறவில் புதியதொரு ஆரம்பத்திற்கு வழிவகுக்கும் ரஷ்ய ஜனாதிபதி நம்பிக்கை. *  ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வீதியோரக் குண்டுவெடிப்பில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டளைத் தளபதியொருவர் பலியாகியுள்ளார்.  *  இரு மாதங்களுக்கு முன்னர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பெல்ஜியம் கப்பலிலிருந்த மாலுமிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

 

You are visitor No:

Welcome. to Visit.Engaltheaasam.com ..!

 

Wanni Operation-Sri Lanka Military Video.20.05.2009

இராணுவ வெற்றி(வீடியோ இணைப்பு) பாகம்.12

Karuna Amman's Special Message Urangatha unmaikal.Video

Karuna Amman's Special Message Urangatha unmaika.Songs

இலங்கை வரைபடம்

(Tamil.NewsVideo)

  Wanni Operation.01.09 2008.Photos

Within two weeks in last month LTTE’s killed list.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 

T.B.C.Live Radio Click Here

 

::T.I.R.Radio Live
::Kalasam.Radio Live

::TRT.TamilAlai.Radio

 
  ::Slbc.lk.Live.Radio 
  ::B.B.C.Tami
  ::இதயவீணை வானொலி

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்..04 ஜுலை, 2009

   E-mail:enngal@gmail.com

(Tamil.News.Video.04.07.09)

    (Tamil.Live.TV)

(Tamil.All.Radio)

ஈழப்போராட்டத்தின் இரத்த சாட்சியங்கள்! 119!.. !(உள்ளே)

கிழக்கில் புலிகளின் ஆயுதங்கள் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் கண்டுபிடித்து வருகின்றனர்.இன்றைய பல செய்திகள் உள்ளே...

செய்தி்நாள்:.04.ஜுலை,2009,கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டு இரு வருடங்களாகி விட்டன. எனினும் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைப் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் கண்டுபிடித்து வருகின்றனர்.

[மேலும்]

 

சூரிச் மாநகரில் புளொட் அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வு,எதிர்வரும் 05.07.2009,இடம்பெறவுள்ளது.

செய்தி்:04.ஜுலை,2009,புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் வருடந்தோறும் ஜுலை மாதத்தில் நடத்தப்பட்டு வரும் வீரமக்கள் தின நிகழ்வுகள் எதிர்வரும் 05.07.2009,ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் சூரிச் மாநகரிலுள்ள உன்ரர் அப்போல்ரன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இதில் ஆரம்ப நிகழ்வாக வீரமக்கள் தினத்திற்குரிய மலராஞ்சலி மற்றும் அக வணக்கம் என்பன இடம்பெறுவதுடன்,இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பிரதம அதிதியாகவும்,சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்போரின் உரைகளும் முக்கியஸ்தர்களின் உரைகளும் இடம்பெறவுள்ளது.

[மேலும்]

தமிழ் சமூகம் தோற்றுப் போன சமூகமல்ல!அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.(படங்கள் இணைப்பு)

செய்தி்:04.ஜுலை,2009,கடற்தொழிலில் 24,மணிநேரமும் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் குடாநாட்டு கடற்தொழிலாளர்களுக்கு தங்களது தொழில்துறைகளில் சுதந்திரமாகவும் விரிவாகவும் ஈடுபட இன்னும் சிற்சில தடைகள் இருப்பதை தான் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் நாளடைவில் இவ்வாறான தடைகள் அனைத்தையும் படிப்படியாக நீக்குவதற்கு தான் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் எனவே கடற்தொழிலாளர்கள் தங்களது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன்

[மேலும்]

இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில்“நாம் பயிரிடுவோம் நாட்டை வளர்படுத்துவோம்”

செய்தி்:04.ஜுலை,2009,“நாம் பயிரிடுவோம் நாட்டை வளர்படுத்துவோம்” என்ற தலைப்பில் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மேற்குறிப்பிட்ட தொனிப்பொருளை மையப்படுத்தி பெற்றோலியம் மற்றும் கனிய வள அமைச்சர் A.H.M,பௌசி,தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் வி.முரளிதரன் அனர்த்த நேவைகள் அமைச்சர் அமீர் அலி மட்டு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகர் பிரதி அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன்

[மேலும்]

வீரமா காளியம்மன் ஆலைய வழிபாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம்.

செய்தி்:04.ஜுலை,2009,யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீரமாகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் நேற்று நடைபெற்ற விசேட வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்,ஆலய குருக்களின் தாயாரான சிவசுப்ரமணியம் சிவபாக்கியம் அமைச்சரை வரவேற்று ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்கு இடம் பெற்ற விசேட பூசைவழிபாடுகளை அடுத்து

[மேலும்]

இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கு ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்து.

செய்தி்:04.ஜுலை,2009,இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் குறைபாடுகளை களையும் அதேவேளை இவ்வருட இறுதிக்குள் அவர்களை மீளவும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழமக்கள் ஐனநாயகக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சந்திரகுமார் தெரிவித்தார்.ஐனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வகட்சி குழு கூட்டத்தில் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி சார்பில்

[மேலும்]

மடுமாதா ஆலய திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம்.

செய்தி்:04.ஜுலை,2009,கத்தோலிக்க மக்களின் யாத்திரைத் தலமாக விளங்கும் மடுமாதா ஆலயத்தின் ஆகஸ்ட் திருவிழா இம்முறை சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இது தொடர்பாக கலந்துரையாட அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ,பிரதியமைச்சர்களான நியோமல் பெரேரா மற்றும் சரத்குமார குணவர்த்தன உட்பட பலரும் மடுவுக்கு வியாழக்கிழமை சென்றிருந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி மடுப்பகுதி

[மேலும்]

வீடியோ ஆதாரம் வெளியானது:மைக்கேல்ஜாக்சனின் கடைசி பயிற்சி ஆட்ட காட்சிகள்;நல்ல உடல் நலத்துடன் இருந்தது கண்டுபிடிப்பு.(வீடியோ இணைப்பு)

செய்தி்:04.ஜுலை,2009,பாப் இசை உலகின் முடி சூடா மன்னராக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் கடந்த வாரம் திடீரென மரணம் அடைந்தார். உடல் வலிக்காக நிறைய ஊசி போட்டுக்கொண்டதால் அவர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. பிறகு அவர் மரணத்தில் மர்மம் எழுந்தது.மைக்கேல் ஜாக்சன் உடலில் 2,தடவை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விட்ட போதிலும், அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பதற்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. அவரது உடல் வரும் 7-ந்தேதி அடக்கம் செய்யப்பட உள்ளது.

[மேலும்]

சீனா,இலங்கையின் நெருக்கமான பிணைப்பால் இந்தியாவுடனான உறவுகளுக்கு தடை இல்லை பெய்ஜிங்கில் அமைச்சர் போகொல்லாகம.

செய்தி்:04.ஜுலை,2009,சீனாவுக்கும் கொழும்புக்கும் இடையில் வளர்ச்சியடைந்து வரும் பிணைப்புகளால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான"தனித்துவமான'உறவுக்குத் தடையாக அமையாது என்று தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, ரயில் தண்டவாளத்தின் இரு தடங்கள் போன்றதே இந்த இருநாடுகளுடனுமான இலங்கையின் உறவு என்றும் வர்ணித்திருக்கிறார்.பெய்ஜிங்கிற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் போகொல்லாகம, இரு தரப்பு உறவுகளை

[மேலும்]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களைப் பலப்படுத்த யாழ் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தீர்மானம்!(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:.30.ஜூன்,மீண்டும்,மீண்டும் அரசுடன் மோதல்களைத் தொடரும் திட்டத்துடனேயே புலிகளின் தலைமை ஏற்றுக் கொள்ள இயலாத நிபந்தனைகளை அரசாங்கத்தின் முன் வைத்து வந்தது என்றும் புலித்தலைமையின் இவ்வாறான செயற்hடுகளின் விளைவாகவே தமிழ்பேசும் மக்கள் இன்று தீராத அவல நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர் என்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

[மேலும்]

மைக்கேல் ஜாக்சன்:கோடிக் கணக்கான ரசிகர்களை மகிழ்வித்தார்.ஆனால் அவருக்கு என்ன கஷ்டம் என்பதை அறிந்து அவரை யாரும் மகிழ்விக்கவில்லை.

“பாப்” இசை உலகின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்நிலையில் அவரது தங்கையும் “பாப்” பாடகியுமான ஜானட் ஜாக்சன் தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-நான் சினிமா சூட்டிங்கில் இருந்தபோதுதான் அண்ணன் மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

[மேலும்]

டிப்ளோமா ஆங்கில ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விண்ணப்பம்.(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:.30.ஜூன்,ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்து பகுதி நேரமாக கடமையாற்றும் ஆங்கில ஆசிரியர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களை அமைச்சரின் யாழ் மாவட்ட காரியாலயத்தில் சந்தித்தனர்.அத்துடன் நிரந்தர நியமனம் பெறாது முழு நேரமாக கடமையாற்றும் ஆங்கில ஆசிரியர்களின் நிரந்தர நியமனத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பான கோரிக்கை கடிதங்களையும் ஆசிரியர்களிடம் இருந்து

[மேலும்]

பாரிய நீர்மூழ்கி வெடி குண்டுகள் புதுக்குடியிருப்பில் கண்டுபிடிப்பு!பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:.30.ஜூன்,கப்பலை மூழ்கடிக்கும் பாரிய நீர்மூழ்கி வெடி குண்டுகள் இரண்டையும் அதனை ஏவும் கருவியொன்றையும் இராணுவத்தின் 8 ஆவது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று தேடுதல் நடத்திய படையினர் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பாரிய குண்டுகளையும் ஏவியையும் மீட்டுள்ளனர்.

[மேலும்]

ஏமன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது.அருகே உள்ள தீவுக் கூட்டமான கோமோரோசுக்கு சென்று கொண்டிருந்தது.

செய்தி்நாள்:.30.ஜூன்,ஏமன் நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று 150 பயணிகளோடு இந்து மகா சமுத்திரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அரபு நாடுகளில் ஒன்றான ஏமனுக்கு சொந்தமான ஏமேனி ஏர்லைன்ஸ் ஒன்று அந்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவின் மோசாம்பிக் கால்வாய் அருகே உள்ள தீவுக் கூட்டமான கோமோரோசுக்கு சென்று கொண்டிருந்தது.

[மேலும்]

மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றம்.

செய்தி்நாள்:.30.ஜூன்,மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்து கடந்த 3 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களில் மற்றுமோர் தொகுதியினர் இன்று கிளிவெட்டிக்கு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.இதன் பிரகாரம் மாவடிவேம்பு மற்றும் பலாச்சோலை ஆகிய முகாம்களில் தங்கியிருந்த 51 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் 7 பஸ்களில் வாகரை ஊடாக

[மேலும்]

பூந்தோட்டம் நிவாரணக் கிராமத்தில் சரணடைந்த புலி உறுப்பினர்களுடன் நாமல் ராஜபக்ஷ நேரில் சந்திப்பு.

செய்தி்நாள்:.30.ஜூன்,வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த‘இளைஞர்களுக்கு நாளை’அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ,அங்கு புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் இருக்கும் சரணடைந்துள்ள புலி உறுப்பினர்களை நேரில் சந்தித்தார்.பூந்தோட்டம் நிவாரணக் கிராமத்தில் படையினரிடம் சரணடைந்த 663 புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

[மேலும்]

யாழ்.கலட்டியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு மற்றும் மரம்நாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்பு.(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:.29.ஜூன்,யாழ்.சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி சமுதாயத்தினரும் ஈபிடிபியினரும் இணைந்து யாழ். மாநகரசபை எல்லைக்குள் பத்தாயிரம் நிழல் தரும் மரங்களை நாட்டும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இந்நிகழ்வின் அங்குராப்பண வைபவம் யாழ்.கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று மாலை ஆரம்பமானது.நிகழ்விற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

[மேலும்]

சரணடைந்த புலிகள் இயக்க அம்பாறை மாவட்ட தலைவர் கடாபி கண்ணிவெடியில் உயிரிழப்பு.

செய்தி்நாள்:.29.ஜூன்,புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதேசங்களிலிருந்து தப்பியோடிய புலிகள் இயக்க உறுப்பினர்களும், பிரதேசத் தலைவர்களும் அண்மைக்காலங்களில் படைமுகாம்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் வந்து சரணடைந்து வந்துள்ளனர்.இவ்வாறு அம்பாறையில் புலிகள் இயக்கத்தின் பிரபல தலைவராக இயங்கிவந்த""கடாபி' எனப்படும் முக்கிய புலி உறுப்பினர் ஒருவர் சில தினங்களுக்கு முன் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.இவரிடம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்ட அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் பின்னர் இவரை மேலதிக

[மேலும்]

<<முன்னைய பதிவுகள்>>

World News - Interactive Map

Slideshow

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பனிகள்(படங்கள் இணைப்பு)

விடுதலை வித்துக்கள் தினம் 2009!

 

Sangamam.TvLive

 

 

Rja.Tv.Live

 

 

Thentral.Tv.Live

 

TMlogo

தமிழ் சஞ்சிகைள்

தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
நக்கீரன்
English
Tamilnet
 Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

INFO LANKA

SriLanka Guardian

   Last update: 20-06-2008. Desigin and Copyright