<%@ Language=JavaScript %> Welcome.To./\.www.engaltheaasam.com Welcome. !

08. 02. 2010. உலக தலைப்பு செய்திகள் :: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் ஓராண்டு பூர்த்தியடைந்த இரண்டாவது ஆண்டு ஆரம்பமாவதை யொட்டி ஜனநாயகக் கட்சியினர் முக்கிய செய்தியை விடுத்துள்ளனர்.  *  அமெரிக்காவில் பெய்த கடும் பனிப் பொழிவால் அங்கு இயல்பு நிலைகள் பாதிக்கப்பட்டன. சனிக்கிழமை மாலை அமெரிக்காவின் வேர்ஜினியா (மேற்கு மாநிலம்), தெற்கு மாநிலமான நியூஜேர்ஸியா என்பவற்றில் கடுமையான பனி பொழிந்தது.  *  ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து மீள் இணக்கப்பாட்டு அரசை உருவாக்க வருமாறு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் அல்கார்ஸாயி விடுத்த அழைப்பை தலிபான்கள் நிராகரித்தனர்.  *  ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் தாமதமடைந்ததற் காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் கவலை தெரிவித்துள்ளதுடன் இனிமேல் தாமதங்களின்றி உதவிகள் கிடைக்குமென உறுதியளித்தார்.  *  ஜேர்மனில் நடந்த சர்வதேச பாது காப்பு மாநாட்டில் இஸ்ரேல் பிரதி வெளிநாட்டமைச்சரும் சவூதி அரே பியாவின் இளவரசரும் கைகுலா விக் கொண்டனர்.

 

 

You are visitor No:

Welcome. to Visit.Engaltheaasam.com ..!

 

இலங்கை வரைபடம்

தொலைகாட்சிகள்..

 

::வசந்தம் டிவி நேரலை
::தீபம் டிவி நேரலை

::ஐங்கரன் டிவி நேரல

::சீஐ டிவி நேரலை
::ஜி டிவி டிவி நேரலை
 

 

வானொலிகள்

 

 

::T.I.R.Radio Live
::Kalasam.Radio Live

::Vsantham.Live.Radio

 
  ::Slbc.lk.Live.Radio 
  ::B.B.C.Tami
 

களஞ்சியம்

யுனிகோட் எழுத்து  

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.07 பிப்ரவரி, 2010

       E-mail:enngal@gmail.com

     *திரைப்படங்கள்*

*MP3 பாடல்கள்*

*வீடியோ பாடல்கள்*

  *தமிழ் அரட்டை*

      DAN Tamil olli Live Tv

Tamil.Live.TV

B.B.C.Tami

   Tamil.All.Radio

       Sun TV - Live

Vijay TV - Live

Tamil.News

     K.Tv - Live

இதயவீணையின் இன்றைய முக்கிய செய்திகள்!!(உள்ளே)

I.T.N.தமிழ் தொலைகாட்சியின் இன்றைய இலங்கை செய்திகள் தொகுப்பு.07.02.2010.(Clik Here To Read Video News)

சோவியத் ரசியாவையும்-ஸ்டாலினையும் அழிக்க நினைத்த அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள்.

(உள்ளே)

 

ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்தார்.(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:08.பிப்.2010,இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ரஷ்ய

[மேலும்]

முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்கா இராணுவ பொலிஸாரினால் இன்றிரவு கைது.(விடியோ இணைப்பு)

செய்தி்நாள்:08.பிப்.2010,முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்கா இராணுவ பொலிஸாரினால் இன்றிரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.இராணுவ குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இராணுவ

[மேலும்]

பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து ஐ.நா.மனித உரிமைப் பேரவை விளக்கமளிக்க இன்று அமைச்சர் சமரசிங்க ஜெனீவா பயணம்.

செய்தி்நாள்:08.பிப்.2010,இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு இன்று(08) ஜெனீவா பயணமானதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சு தெரி வித்தது.சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர்

[மேலும்]

உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செஞ்சதுக்கத்தை சென்று பார்வையிட்டுள்ளார்.(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:08.பிப்.2010,இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செஞ்சதுக்கத்தை சென்று பார்வையிட்டுள்ளார்.ரஷ்ய புரட்சியின் பின்னர் உழைப்பாளிகளின் வெற்றியை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செஞ்சதுக்கத்திற்கு சென்ற

[மேலும்]

ஜே.வி.பி.,ஐ.தே.க.மற்றும் புலிகளால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்-அரசாங்கம் குற்றச்சாட்டு.

செய்தி்நாள்:08.பிப்.2010,ஐக்கிய தேசியக் கட்சி,ஜே.வி.பி.மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களினால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் வெளிநாட்டுத் தரப்பினருடன் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி யும்

[மேலும்]

கொழும்பு மாவட்ட வேட்பாளர் தெரிவில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும்,ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இடையே முறுகல் நிலை.

செய்தி்நாள்:08.பிப்.2010,ஜனநாயக மக்கள் முன்னணிக்கும்,ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர் நியமனங்களை பங்கிட்டுக்கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது பற்றி தெரியவருவதாவது,ஜனநாயக மக்கள் முன்னணிக்கும்,ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட நியமனங்களை பங்கிட்டுக் கொள்வதில் முரண்பாடு

[மேலும்]

ஆயுதக் கொள்வனவு,ஏவுகணைத் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட புலி உறுப்பினர் இருவர் மறியலில்!

செய்தி்நாள்:08.பிப்.2010,படையினர் மீது தாக்குதல் மேற் கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை இலங்கைக்கு கொண்டு வந்த விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 24கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24ரக தாக்குதல் உலங்குவானூர்தியை அழித்த விடுதலைப் புலி உறுப்பினர் ஆகிய இருவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள

[மேலும்]

சக்தி ரீவியின் மின்னல் நிகழ்ச்சி ஊடாக பிரபலமானவர் ரங்கா.ஆயுதக்குழு வைத்திருப்பவர் யார்?அதன்(ஒலிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

செய்தி்நாள்:07.பிப்.2010,சக்தி ரீவியின் மின்னல் நிகழ்ச்சி ஊடாக பிரபலமானவர் ரங்கா.அடிக்கடி ஆயுதக்குழுவினர் என்றும் ஆயுததாரிகள் என்றும் ஜனநாயக வழிக்கு திரும்பிய தமிழ்க்கட்சிகளை சீண்டிக்கொண்டே இருப்பது அவர் வழக்கம்.அண்மையில் ஹட்டனில் அவர் நடந்துகொண்ட முறை குறித்து இந்த ஜனநாய கட்சிகள் எதுவுமே கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வேடிக்கை. ரங்கா அன்று ஹட்டனில் என்ன செய்தார் என்பதை ஹட்டன் டிக்கோயா நகரசபைத் தலைவர் நந்தகுமார் சூரியன் எவ்.எம் இற்கு பேட்டியளித்துள்ளார்.அதன் ஒலிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

[மேலும்]

தோழர் இளங்கோ(கணபதிப்பிள்ளை இரவீந்திரன் சாவகச்சேரி)இயற்கை எய்தினார்.பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

செய்தி்நாள்:07.பிப்.2010,கடந்து வந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் தோழர் இளங்கோசாவக்கச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் இளங்கோ(கணபதிபிள்ளை ரவீந்திரன்)தனது சமூகப் பணிகளுக்காக தனது பல்கலைகழக கல்வியைகூட துறந்தவர்.யாழ் பல்கலைகழகத்தில் வர்த்தகத்துறை மாணவர் அவர்.மக்களை விழிப்படையச் செய்வதற்கான கலை

[மேலும்]

சரத் பொன்சேகா மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.

செய்தி்நாள்:07.பிப்.2010,இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யவும்,ஜனாதிபதி ராஜபட்சவை சுட்டுக்கொல்லவும் சசித்திட்டம் தீட்டியதாக முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தபிறகு இந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற பொன்சேகா திட்டமிட்டதாக அவர் மீது அரசு புகார் கூறியுள்ளது.இது

[மேலும்]

அதிகாரம் உள்ள ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வது மக்கள்தான்:பொன்சேகா ஏன் தோல்வியைச் சந்தித்தார்?

செய்தி்நாள்:07.பிப்.2010,அரசியல் ஒரு சாக்கடை என்று அடிக்கடி சிலர் கூறினாலும் அயோக்கியனின் கடைசிப்புகலிடம் அரசியல் என்று ஓர் அறிஞன் குறிப்பிட்டிருந்தாலும் ஒரு நாட்டினுடைய நிர்வாக அதிகாரம் அரசியல்வாதிகளின் கைகளில்தான் தங்கியிருக்கிறது என்பதை அறிவுள்ள எவராலும் ஆட்சேபிக்க முடியாது.மக்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி,உடன்பட்டாலும் சரி முரண்பட்டாலும் சரி அரசியல்

[மேலும்]

ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்பட்ட எதிரணிக் கட்சிகளின் தேர்தல் கூட்டு உடைகிறது.

செய்தி்நாள்:07.பிப்.2010,ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்பட்ட எதிரணிக் கட்சிகளின் தேர்தல் கூட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிளவுபடும் நிலை உருவாகின்றது.எதிரணிக் கட்சிகள் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்த சர்ச்சை இடம் பெறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஐ.தே.க.யானைச் சின்னத்தில் போட்டியிடுவதில் மிக உறுதியாக இருக்கின்றது.ஜே.வி.பியை அடுத்த தேர்தலில் கூட்டணியில்

[மேலும்]

தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க திரைமறைவுச் சதி தீட்டப்படுகிறதாம்: வினோநோகராதலிங்கம்.

செய்தி்நாள்:07.பிப்.2010,எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது வட-கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச் செய்து, நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதி ஒன்று தீட்டப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,.நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு

[மேலும்]

பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட இ.தொ.க.தீர்மானம் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

செய்தி்நாள்:07.பிப்.2010,பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரச தரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண,தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டி யிடுவதற்கு வாய்ப்புகள்

[மேலும்]

இலங்கையில் யுத்தத்துக்குப் பின்னரான உட்கட்டுமானத்துக்கு சீனா 350மில்லியன் டொலர் நிதி உதவி.

செய்தி்நாள்:07.பிப்.2010,இலங்கையில் யுத்தத்துக்கு பின்னரான உட்கட்டுமானப் பணிகளை முன்னெடுப் பதற்கு,350 மில்லியன் அமெரிக்க டொலர் களை சீனா நிதி உதவி வழங்கவுள்ளது.சீன ஜனாதிபதி கூ ஜின்ரா மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.இலங்கையில் யுத்தத்துக்கு பின்னரான உட்கட்டுமானப் பணிகளை முன்னெடுப் பதற்கு,350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா

[மேலும்]

"ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை ரத்துச் செய்வதுகுறித்து முறையான தீர்மானம் எடுக்கப்படவில்லை''-ஐரோப்பியம்.

செய்தி்நாள்:07.பிப்.2010,இலங்கைக்கான ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் முறையான தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அதற்கு இம்மாத இறுதிவரை அவகாசம் உள்ளது எனவும் பெல்ஜியம்,ஐரோப்பிய ஒன்றியம்,மற்றும் லக்ஸம்பேர்க்கிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார்.இதேவேளை இலங்கை அரசாங்கம் இது தொடர்பில்

[மேலும்]

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு;இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து ரஷ்ய நட்புறவு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவம்.(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:06.பிப்.2010,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று(06)ரஷ்யா போய்ச் சேர்ந்தார்.மொஸ்கோ வினுகோஆ சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு பெரு வரவேற்பளி க்கப்பட்டது.ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு

[மேலும்]

புலித் தலைவர் பிரபகாரன் ஒளிந்திருந்த இடத்தை இலங்கை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

செய்தி்நாள்:06.பிப்.2010,இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் புலிகளுக்கு எதிராக நடந்த கடைசி கட்ட போரின் புலித் தலைவர் பிரபகாரன் தப்பி செல்ல முயன்ற போது சுட்டு கொல்லப் பட்ட பின் அவர் ஒளிந்திருந்த இடத்தை இலங்கை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.தற்போது இலங்கை ராணுவத்தின் பிடியில் இருக்கும் பிரபாகரனின் கூட்டாளிகள் 6பேர் அளித்த தகவலின் பேரில் இந்த தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.இதில்

[மேலும்]

வெளி விவகார அமைச்சர் யாழ் விஜயம் (விடியோ இணைப்பு)

தேர்தல் வெற்றியின் பின் ரஷ்யாவுக்கு ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம்.

செய்தி்நாள்:06.பிப்.2010,ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இரண்டாவது பதவிக்காலத்துக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி,தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்திருப்பது தொடர்பாக அரசியல் இராஜதந்திர வட்டாரங்களில் கவனிக்கப்படாமல் விடப்படவில்லை.ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாக ஆய்வாளர்களும் இலங்கை தொடர்பான அவதானிப்பாளர்களும் நிச்சயமாக அர்த்தங்களை எடுத்துக் கொள்ளக்கூடும் என்பது நிச்சயமான விடயம்.ஆனால்,ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து விடுக்கப்பட்ட அழைப்பு நீண்டகாலமாக இருந்து

[மேலும்]

ரஷ்ய பாணியிலான சதிப்புரட்சிக்கு திட்டம் வகுத்திருந்தார் பொன்சேகா ஜே.வி.பி.யினரே சூத்திரதாரிகள்;அரசு குற்றச்சாட்டு.

செய்தி்நாள்:06.பிப்.2010,ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக"ரஷ்ய பாணியிலான சதிப்புரட்சியை அரங்கேற்றுவதற்கான முயற்சியில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டதாக அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அவரின் சகோதரர்களான கோதாபய ராஜபக்ஷ,பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் படுகொலை செய்த பின்னர் சகல அரசாங்க நிறுவனங்களிலும்"போல்ஷேவிக் குழுக்களை நியமிக்கும் திட்டத்தை பொன்சேகா கொண்டிருந்ததாக தகவல் ஊடகத்துறை

[மேலும்]

ஹக்கீம் தலைமையிலான மு.காவை அரசுடன் இணைப்பதில்லையென ஜனாதிபதி எம்மிடம் உறுதி வடக்கு,கிழக்கு முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கே ஆதரவு.

செய்தி்நாள்:06.பிப்.2010,ரவூப் ஹக்கீம் சார்ந்த முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்ததாக கட்சியின் தலைவரும் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நிப்போன் ஹோட்டலில் நடை பெற்றது.இதன்போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான அமைச்சர்

[மேலும்]

இரண்டு தேசம் இணைந்த ஒன்றியம் என்ற தீர்வையே வலியுறுத்துவோம்-சிவாஜிலிங்கம் எம்.பி. தெரிவிப்பு.

செய்தி்நாள்:06.பிப்.2010,இரண்டு தேசம் இணைந்த ஒன்றியம் என்ற தீர்வை வலியுறுத்த அனைத்து சிறுபான்மைக்கட்சிகளும் ஒன்றி ணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,நாம் பாராளுமன்றத் தேர்தலில் தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவது என்ற முடிபை இப்பொழுது கூற முடியாது. ஏனெனில் எமது ரெலோ அமைப்பின் நடவடிக் கைக்குழு இன்று கூடுகின்றது.இதில் முக்கியமான தீர்மானங்களை எடுத்து

[மேலும்]

நாட்டில் சரியான நிலைமை ஏற்படும் வரை அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்: பிரதமர்.

செய்தி்நாள்:05.பிப்.2010,நாட்டில் சரியான நிலைமை ஏற்படும் வரை அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அவசரகாலச் சட்டம் 87மேலதிக வாக்குகளால் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டது.அவசரகாலச் சட்டப் பிரேரணையின் பின்னர் உரையாற்றியபே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்."விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்.அதற்கான திகதியை உரிய நேரத்தில் நாம் அறிவிப்போம்.நாட்டில் சரியான நிலைமை ஏற்படும் வரை அவசரசாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது

[மேலும்]

இலங்கை கூட்டுப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் மருத்துவமனையில் அனுமதி.

செய்தி்நாள்:05.பிப்.2010,இலங்கை கூட்டுப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தானுன திலகரத்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியது தொடர்பான விவகாரத்தில் திலகரத்னவுக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டதால்,அவரிடம் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தவிருந்த நிலையில்,தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை செய்திகள்

[மேலும்]

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பினால் ஒன்றும் செய்ய முடியா நிலையில் எதிரணியினா;பொய் வதந்திகளைப் பரப்புகின்றனா.!

செய்தி்நாள்:05.பிப்.2010,ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பினால் ஒன்றும் செய்ய முடியா நிலை ஏற்பட்டதனால் மக்கள் விடுதலை முன்னணி உட்பட சகல எதிரணிக் கட்சிகளும் தேர்தல் முடிவுகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பொய் வதந்திகளைப் பரப்பிவருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்.ஜனாதிபதித் தேர்தல் முறையாக அமைதியாக நடைபெற்றதாக எதிhக்கட்சித் தலைவர் ரணில்

[மேலும்]

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நாளை அல்லது 10ஆம் திகதி பாராளுமன்றம்  கலைக்கப்படலாம்.?

செய்தி்நாள்:05.பிப்.2010,பாராளுமன்றம் நாளை அல்லது எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை கலைக்கப்படலாம் என அரசதரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.அந்தவகையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடுகின்றது.இதன்போது அவசரகால

[மேலும்]

இலங்கையின் 62வது சுதந்திர தினம் மட்டக்களப்பிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:05.பிப்.2010,மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திரதின நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார்.இதில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் பிரதி முதல்வர் பிரதீப் மாஸ்டர் மாநகரசபை ஆணையாளர் சிவநாதன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் அதிகாரிகள் உட்பட பெருமளவு பொதுமக்களும்

[மேலும்]

சுதந்திரதினத்தியொட்டி கண்டியில் இடம்பெற்ற இந்துசமய நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்பு.(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:05.பிப்.2010,இலங்கையின் 62வது சுதந்திரதின பிரதான நிகழ்வுகள் கண்டியில் இடம்பெற்ற நிலையில் அங்கு இடம்பெற்ற இந்துமத அனுஷ்டான நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்றார்.கண்டி செல்வவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மேற்படி சுதந்திர தினத்தினையொட்டிய இந்துமத அனுஸ்டான நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் ராமானுஜம்

[மேலும்]

அர்ப்பணிப்பு,ஊழலற்ற சேவை மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் கண்டி சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி உரை.

செய்தி்நாள்:04.பிப்.2010,தண்டனை,இம்சை,இராணுவ சட்ட திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகள்,ஊழல் மோசடியற்ற சேவை மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.தமது அரசியல் பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எச்சந்தர்ப்பத்திலும் எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொண்ட தில்லையென தெரிவித்த ஜனாதிபதி,தாய்நாட்டின் ஒரு அங்குல நிலத்தையாவது

[மேலும்]

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு:1576கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி்நாள்:04.பிப்.2010,சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள 37சிறைச்சாலைகளைச் சேர்ந்த 1576கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையின் 62வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே 1576கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும்,ஊடகப் பேச்சாளருமான கெனட் பெர்னாட்டோ தினகரனுக்குத்

[மேலும்]

சுடரொளி ஆசிரியர் வித்தியாதரனை நான் மிரட்டவில்லை.ஆனால் தர்க்கப்பட்டிருக்கிறேன் என்கிறார் கிஷோர் எம்.பி!....

செய்தி்நாள்:04.பிப்.2010,சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர் திரு.வித்தியாதரன் அவர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக வெளிவந்த செய்தி குறித்து எங்கள் தேசம் செய்தியாளர் கிஷோர் எம் பியுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.வணக்கம்!....நாங்கள் எங்கள் தேசம் இணையம்….சுடரொளி ஆசிரியர் வித்தியாதரனை நீங்கள் மிரட்டியதாக செய்திகள் வந்திருக்கின்றன.இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்.நான் ஒருவரையும் மிரட்டவில்லை ராசா!...தொலை பேசியில் தொடர்பு கொண்டு சில விடயங்கள் குறித்து அவரோடு பேசினேன். அவ்வளவுதான்….

[மேலும்]

 
 

Google

<<முன்னைய பதிவுகள்>>

World News - Interactive Map

Slideshow

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

     
 

தமிழ் சஞ்சிகைள்

 

 

தமிழ்ஓசை

வலம்புரி
தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
 
 

சினிமா

 
     
தமிழ் சினிமா
சினிமா சௌத்
சினிமாமலர்
தினத்தந்தி
தினகரன்
 
English
yahoo
google
BBC
CNN
Lankapage
Worldnews

INFO LANKA

SriLanka Guardian

   Last update: 20-06-2008. Desigin and Copyright